ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி
ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் நடவடிக்கையானது நேற்றையதினம்(13.08.2023) ஈரானின் ஷிராஸில் நகரில் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பதில் தாக்குதல்
மேலும், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்லாமிய அரசு 15 பேரைக் கொன்ற சம்பவத்திற்கான பதில் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
