ஈரான் பலவீனமடைந்துள்ளது : அமெரிக்க உளவுத்துறைத் தலைவரின் அறிக்கை
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) மற்றும் முக்கிய அதிகாரிகள், ஈரானின் தற்போதைய நிலை மற்றும் போர் குறித்த உளவுத்துறை தகவல்களை நாடாளுமன்ற விசாரணையில் சமர்ப்பித்தனர்.
ஈரானிய ஆட்சி இன்னும் சிதையாமல் இருந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது "பெருமளவில் பலவீனமடைந்துள்ளது" (Largely Degraded) என துளசி கப்பார்ட் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள்
2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட '12 நாள் போரின்' மூலம் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப ஈரான் இன்னும் முயலவில்லை என்றும் உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.
போர் ஏற்பட்டால் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் என்பதை அமெரிக்க உளவுத்துறை முன்கூட்டியே கணித்திருந்ததாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை அச்சுறுத்தல் (Imminent Threat): ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்ததா என்ற கேள்விக்கு நேரடியான பதிலை துளசி கப்பார்ட் தவிர்க்கவே முயன்றார்.
"ஜனாதிபதி மட்டுமே அச்சுறுத்தல் குறித்து தீர்மானிக்க முடியும்" என அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் கருத்துக்களுக்கு முரணாக
ஜோ கென்ட் ராஜினாமா: ஈரானால் உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லை எனக் கூறி, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்டம் "முற்றாக அழிக்கப்பட்டது" என்ற குறிப்பை துளசி கப்பார்ட் தனது உரையில் வாசிக்கத் தவறியது குறித்து செனட்டர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துக்களுக்கு முரணாக அமையக்கூடாது என்பதற்காகவே இது தவிர்க்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து 2025 ஜூன் மாதம் ஈரான் மீது 12 நாட்கள் தாக்குதல் நடத்தின. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026