இஸ்ரேலின் வான் பரப்பை கிழித்துச் செல்லும் ஈரானின் Fattah - 01 ஏவுகணைகள்
ஈரான்- இஸ்ரேல் போரானது இன்னும் இரண்டு நாட்களில் மிகப்பெரிய பிரலயமாக அல்லது வேறு வடிவிலும் மாறலாம் எனவும் அது இஸ்ரேல்- அமெரிக்கா கையில் உள்ளது என்று பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேலின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குகின்றது என்றால் அவர்களுக்கான செட்லைட் உதவிகளை யார் செய்கிறார்கள் என்ற கேள்வியெழும்புகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்திவிட்டு அதனை ஈரான் செய்ததாக குற்றஞ்சாட்டலாம் என்ற தகவல்களும் வெளிவருகின்றன.
இஸ்ரேலிலுள்ள ஏவுகணைகள் இன்னும் 12 நாட்கள் தாக்குபிடிக்கும் என்றும் ஈரானின் ஒரு அலையை தாக்க 100ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வேண்டும் என்றும் சர்வதேச ஊடகங்கமொன்று தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
