நடுக்கடலில் அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல்! உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் அழைப்பு
அமெரிக்கப் படைகளால் ஈரானிய சரக்குக் கப்பலான 'தௌஸ்கா' கைப்பற்றப்பட்டதை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
ஈரானியக் கப்பல், அதன் மாலுமிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் சூளுரை
ஓமான் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முயன்ற ஈரானியக் கொடி கொண்ட கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி அதைக் கைப்பற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளில், ஒரு ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல் அந்தக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் அதன் தளத்திற்கு இறங்குவதும் காட்டப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் "மிகவும் ஆபத்தானது" மற்றும் "குற்றவியல் தன்மை கொண்டது" என்று குறிப்பிட்டிருந்ததுடன் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பதாக ஈரான் முன்னதாகச் சூளுரைத்திருந்தது.
ஈரான் கப்பல்
சரக்கின் மதிப்பு "மில்லியன்கள்" என்று அது கூறியது, ஆனால் அது என்ன சரக்கு என்பதைக் குறிப்பிடவில்லை.

ஈரானின் தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் காக்கவும், அதன் குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணவும் இஸ்லாமிய ஈரான் குடியரசு தனது அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரித்தால், அதற்கான முழுப் பொறுப்பும் அமெரிக்காவையே சாரும் என்பதும் தெளிவாகிறது. கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பதும், அவர்கள் ஈரானியர்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam