ஈரானில் மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' உடன் தொடர்புடையவர்கள் உட்பட 35 பேரை ஈரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கைது செய்யப்பட்டவர்களில் மொசாட் அமைப்பின் ஆதரவாளர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
நாட்டின் ஆறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஈரானின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam