இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்..! ஈரான் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராச்சி (Seyed Abbas Aragchi) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் (Pahalgam ) நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் இவ்வாறு அறிவித்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் திகதி தாக்குதல் நடத்தினர்.
இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா (LeT)) ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் அழிக்கப்பட்டன.
எல்லைப் பகுதியில் பதற்றம்
எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை தவிர்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
