ஐபிஎல் 2026! சிஎஸ்கே அணி விடுவிக்கவுள்ள 5 வீரர்கள்
சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாத்தி, சேம்கரன், டெவான் கோன்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
கடைசியாக அந்த அணி 2023ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில்,கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை நவம்பர் 15ஆம் திகதிக்குள் பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
இதனால் ஒவ்வொரு அணியின் தங்களது அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது குறித்த பட்டியலை ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுவிக்கும் வீரர்கள்
அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி, சேம்கரன், டெவான் கோன்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சிஎஸ்கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது மேலும் இலங்கை வீரர் மதீஷ பதிரணா சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
