ஓமானில் தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள்:பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சர்வதேச பொலிஸார் அல்லது இன்டர்போல் அமைப்பின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை பொலிஸார், இன்டர்போல் அமைப்பின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கை பெண்கள் தொடர்பில் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விசிட் வீசாவில் டுபாய் அழைத்துச் சென்று அங்கிருந்து ஓமானுக்கு கொண்டு செல்லப்படும் இலங்கை பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்ட ஓமான் தூதரக அதிகாரி இதுவரையில் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 14 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
