பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நூற்றாண்டு விழாவிற்கு கலாநிதி தி. கமலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அறக்கட்டளை மற்றும் யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரி என்பன இணைந்து யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரி சரஸ்வதி அரங்கில் நூற்றாண்டு விழாவை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி மாலை 2 மணி தொடக்கம் 6 மணி வரையிலும், மறுநாள் 12ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த நூற்றாண்டு விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |