புலம்பெயர் ஈழத்தமிழரை இலக்குவைத்து புலனாய்வாளர்களின் நகர்வு
இந்தியாவில் உள்ள புலனாய்வாளர்களின் அறிக்கைகளை மையமாகக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழரை நகர்த்தும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களிடம் தமிழர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள பல இரகசிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகள் இந்தியாவினை கடந்து இலங்கையில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்வதினை விரும்பாது இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஈழத்தமிழர்களை வைத்து புலம்பெயர்ந்தோரை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இரகசியமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan