யாழ். பல்கலைக்கழக மாணவர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் (video)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (30.01.2023) திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடலுக்காக சென்றுள்ளனர்.
இதன்போது மாணவர்கள் பயணித்த வாகனத்தையும், மாணவர்களையும், காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்துள்ளனர்.
எனினும் அவர்களை புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்த நிலையிலும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என மாணவர்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
மேலதிக தகவல்: கஜிந்தன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri