யாழ். பல்கலைக்கழக மாணவர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் (video)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (30.01.2023) திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடலுக்காக சென்றுள்ளனர்.
இதன்போது மாணவர்கள் பயணித்த வாகனத்தையும், மாணவர்களையும், காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்துள்ளனர்.
எனினும் அவர்களை புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்த நிலையிலும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என மாணவர்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
மேலதிக தகவல்: கஜிந்தன்
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri