நாடாளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகத்துக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் ஒருவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத்துறையின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் உத்தரவின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெகுவிரைவில் கைது
குறித்த முன்னாள் செயலாளர் நாயகம் கடந்த காலங்களில் ஏராளம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதற்காக அவர் பெருந்தொகை நிதியைச் செலவிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவர் அரசியலமைப்புப் பேரவையிலும் முக்கிய பதவியொன்றை வகித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மேற்குறித்த முன்னாள் செயலாளர் நாயகம் வெகுவிரைவில் கைது செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam