வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முறைப்பாடு பதிவு
குறித்த ஊடக சந்திப்பின்போது, சுகாதார பணிப்பாளரிடம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் சிலர், புதிதாக பதவியேற்ற பொறுப்பு வைத்தியர் அர்சுனா மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளமை தொடர்பில், நடவடிக்கை எடுத்தீர்களா என்று ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது பதில் அளித்த பணிப்பாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை இடை நிறுத்தும் ஏற்பாடுகள் ஏதேனும் இடம்பெற்றதா எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் கூறாமல் மத்தியில் இருந்து விசாரணை குழு குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
