2026இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை - இறுக்கமடையும் சூழல்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான காலப்பகுதியாக செப்டெம்பர் மாதம் காணப்படுகிறது.
இதில் ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் என்ற சூழ்நிலையில் காலம் நெருங்க நெருங்க அதற்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு செல்வதான போக்கும் காணப்படுகிறது.
குறிப்பாக ஐசிசியானது 2002இற்கு முன்னர் உள்ள குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விடயங்களையும் விசாரணைக்கு உட்படுத்தாது.
இந்நிலையில் ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவீர்கள் என்றால் மாத்திரமே ஐசிசி விசாரணைக்கு உட்படுத்துங்கள்.இல்லையெனில் அதற்கு நிகரான தீர்ப்பாய பொறிமுறையை பயன்படுத்துங்கள் என கோரியபோதும் கஜேந்திரகுமார் பொன்னம்பவலம் உள்ளிட்ட தரப்பினர் அதை தட்டிக் கழித்தார்கள் என மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




