போலி மருந்துகளை தயாரித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் : வெளியான உண்மை
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா தலைமையிலான மதிப்பீட்டுக் குழு, சீதுவை தளமாகக் கொண்ட போலி மருந்துகளை தயாரித்த, Isolez Biotech Pharma AG நிறுவனத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக அரச கணக்காய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, நிறுவனத்தின் போலியான இம்யூனோகுளோபுலின் மற்றும் rituximab ஊசிகளை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் “ஏல” ஆவணங்களில் வெளிப்படையான முரண்பாடுகள் இருந்தும் கூட, மேலும் நான்கு மருந்துகளை அந்த நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதார அமைச்சு குறித்த நிறுவனத்தின் ; 3,985 இம்யூனோகுளோபுலின் குப்பிகளுக்கு 144,293,355 ரூபாய்களை செலுத்தியுள்ளது.
இந்தநிலையில் சுகாதார அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த மருந்துகள் முக்கியமாக புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளாகும்.
இதற்கிடையில் போலியான இந்த மருந்துக் கொள்வனவு தொடர்பில், இதுவரை, சுகாதார அமைச்சின் 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
