சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது: மகிந்த எச்சரிக்கை
ராஜபக்சர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம். ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சர்கள் தோற்கவும் இல்லை,தோற்கடிக்கப்படவும் இல்லை. சுயமாகப் பதவிகளிலிருந்து விலகிய அவர்கள் விரைவில் மீளெழுச்சி பெறுவார்கள்.
எதிரணியினரின் மதிப்பீடு

எதிரணியினர் ராஜபக்சர்களை கண்டபடி வசைபாடுகின்றனர். குறைத்து மதிப்பிடுகின்றனர். ராஜபக்சர்களின் அருமையும், திறமையும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றாக புரியும்.
உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது.
தேர்தலில் முடிவு தெரியும்

தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ராஜபக்சர்களினதும் மொட்டு கட்சியினரினதும் கைகள் மீண்டும் ஓங்கும். அந்த தேர்தலில் எதிரணியினர் வழமை போன்று தோல்வியையே தழுவுவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதை நான் வரவேற்கின்றேன்.
தனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் சிறந்த முடிவை எடுப்பார்.”
என கூறியுள்ளார்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam