போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.04.2024) கொழும்பு - டார்லி (Colombo-Darley) வீதியில் பதிவாகியுள்ளது.
புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழமையான அலுவல் நிமித்தம் டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த இளைஞரொருவர் போலியான கைத்துப்பாக்கியொன்றைக் காட்டி அவரை அச்சுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதான இளைஞன் என்றும் சாரதியாக பணியாற்றுபவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
