குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான காரணம்
தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (25 ஆம் திகதி) பிற்பகல், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் தனது இரு நண்பர்கள் கேலியாக உயிரிழந்த இளைஞனின் ஆசனவாயில் சுவாசக் குழாயைப் பிடித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை
இதன்போது, குறித்த இளைஞர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற (29ஆம் திகதி) பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை வசிப்பவர்கள் என்பதுடன் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொ.ச. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஒசித லங்கா டி சில்வாவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan