நாட்டை விட்டு தப்பிச்சென்ற 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எச்சரிக்கை
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் எச்சரிக்கை அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளனர்.
இந்த 88 இலங்கையர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் நீல அறிவிப்பினை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை
இதேவேளை, இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற 41 போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இந்தியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள 9 இலங்கையர்களுக்கு எதிரான விசாரணைகளின் நிறைவில் அவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam