வவுனியாவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு
வவுனியா, ஓமந்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டடத் தொகுதியுடன் கூடிய தடகள விளையாட்டு மைதானம் நேற்று(12.06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுதத் திலகரத்ன அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மைதானம் நீண்ட காலமாக பயன்பாடு இன்றி காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் விளையாட்டு துறை அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து அது தொடர்பில் ஆராய்ந்ததன் அடிப்படையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மைதானம்
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், விளையாட்டுத் துறை அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
