குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சிறப்பு கலந்துரையாடலானது இன்று (12) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





