இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகள் வரலாம்! அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடும், மக்களும் பெற்றுக்கொண்ட வெற்றிகளை தற்போதைய அரசாங்கம் ஒவ்வொன்றாக பின்நோக்கி திருப்பி வருகிறது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல(Lakshman kiriella) தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாக்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக சர்வதேசம் எமது நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேசத்தை வெற்றிகொண்டு, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
