ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை! - இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் சர்வதேச அமைப்புகள்
பயங்கரவாத தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் வரை இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதை தவிர்க்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பதினைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பயங்கரவாத தடை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அது இரத்து செய்யப்படாது என்றும் அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam