ஜனாதிபதி கோட்டாபயவின் நிர்வாகத்தின் கீழ் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது! சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Human rights
By Independent Writer Jan 15, 2021 02:35 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கை 2021 இல் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது படைத்தரப்பினரின் மிரட்டல் மற்றும் கண்காணிப்புகள் அதிகரித்துள்ளன.

சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பாகுபாடு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் உட்பட்ட சுயாதீன நிறுவனங்களை பலவீனப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கோட்டாபயவின் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த பெப்ரவரியில் நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து உண்மை மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான 2015 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து, முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை நன்மைகளை விரைவாக மாற்றியமைத்தது, இது, சிறுபான்மையினரை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றியுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் கூட தற்போது இராணுவப் பங்கால் ரத்து செய்யப்படுகிறது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூத்த பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்,

அவரைப் போலவே, 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்பட்டவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்கள் என்று கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்

கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் வேண்டுமென்றே வைரஸை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம் வணிகங்களை புறக்கணிக்க சமூக ஊடங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் சர்வதேச ஏற்றுக்கொள்ளலுக்கு புறம்பாக கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அரசாங்கம் தகனம் செய்து வருகிறது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய பொது பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் மனித உரிமை மீறல்களின் மோசமான பழைய நாட்களுக்கு மீண்டும் இலங்கை திரும்புவதைத் தடுக்க சர்வதேச அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US