எமது ஆட்சியில் வடகிழக்கிற்கான சர்வதேச மாநாடு கூட்டப்படும் : சஜித் உறுதி
தாம் ஆட்சிக்கு வந்தால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இந்த முயற்சி எஞ்சிய ஏழு மாகாணங்களுக்கும் பயனளிக்கும் என்று தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே சஜித் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நீ;டிக்கப்படும் என்று அவர் இதன்போது உறுதியளித்தார்.

தானாக முன்வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக கொடுப்பனவுகள்,உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் அநியாயமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் பிரேமதாச உறுதிமொழிகளை வழங்கினார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan