ஜனாதிபதியின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Colombo Gotabaya Rajapaksa Supreme Court Dr. Paikiasothy Saravanamuttu
By Murali Aug 05, 2021 05:23 PM GMT
Report

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலளார்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்தது. மர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் உள்ளிட்டவர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்டெடுத்தல் என்ற பெயரில் ஓர் உபபிரிவு உருவாக்கப்பட்டது.

இந்த உபபிரிவின் ஊடாக நாட்டின் எந்தவொரு பிரஜையையும் நீதிமன்ற செயற்பாடுகள் இன்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட முடியும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் அமைப்பின் பல்வேறு சரத்துக்களை நேரடியாக மீறும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் உத்தரவினை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US