மகிந்தவின் பதவி விலகலுடன் ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் (VIDEO)
இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவிலிருந்து நீக்க முடியாதெனவும்,தேவையேற்படின் அரசாங்கத்தை மாற்ற முடியும் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மாற்றும் பட்சத்தில் தற்போது அரசு எனும் நிறுவனத்தை நிர்வகிக்கும் கோட்டாபய ராஷபக்சவின் ஆதரவாளர்கள் அல்லது பினாமிகளே பிரதமர் பதவியில் அமர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தாலும், அமைத்தாலும் கூட அவர்கள் ஒருபோதும் கோட்டாபயவிற்கு எதிராக செயற்படப்போவதில்லை என்றும்,தற்போதைய நெருக்கடி நிலையில், வெற்றி நாயகன் என்று பெயர் பெற்ற விம்பத்தை உடைத்துவிட்டனர் என்றும் தெரவித்துள்ளார்.