இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்! ஜனாதிபதி தெரிவிப்பு
இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கவனம்
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
22ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.