இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிபந்தனை!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டால், இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க தயார் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாட்டில் இன்று நம்பிக்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை இன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை பிரச்சினைக்கு தீர்வை காணாது போனால் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவிருக்கும் நிலையில் நாட்டில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஏரான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.