மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரை ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, மாத்தறை, காலி, பெலியத்தை, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.