சிறையிலுள்ள 556 நபர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 556 நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பின் போது தொடுக்கப்பட்ட வினாவுக்கு பதிலளித்த அமைச்சர், பொலிஸ் மற்றும் புலனாய்வு துறையால் கண்காணிப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றவாளிகளால் 103 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக 33 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டின் இன்றுவரையில் 58 T56 துப்பாக்கிகள் மற்றும் 61 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,698 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 14 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது அந்த நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




