அறிகுறிகள் தென்பட்டால் காத்திருக்க வேண்டாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் இந்நாட்களில் பல வைரஸ் காய்ச்சல்கள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், இன்புளுவன்ஸா அபாயம் நீங்கவில்லை எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நாட்களில் காய்ச்சல், தொண்டை வலி, என்பன காணப்படுமாயின் சிகிச்சை பெற காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்
எனவே இன்புளுவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், ஆபத்தான நிலையில் உள்ள முதியோர், சிறு குழந்தைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்கள் குணமடைய சிறிது கால அவகாசம் தேவைப்படுவதுடன், மேலும் முகக்கவசங்களை அணிவதன் மூலமும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் டொக்டர் ரோஹினி வடநம்பி குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
