இலங்கையர்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள புதிய நோய் பரவல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஒருவர் மாத்திரமே லிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில விடயங்கள் உண்மையல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இரண்டு நோயாளர்கள் லிஸ்டீரியா நோயால் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களா என்பது தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகள்
மேலும், இது தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உணவின் மூலம் லிஸ்டீரியா நோய்த்தொற்று ஏற்படுவதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சிலருக்கு லிஸ்டீரியா நோய் தாக்கிய பிறகு கோமா உருவாகலாம் என்றும், எவ்வாறாயினும், இந்த நோயைத் தடுக்க கைகளை கழுவுதல் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது என்றும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan