வர்த்தகர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
கோவிட் தொற்றுக்காரணமாக கடந்த ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடத்தை கொண்டாட முடியாமல் போனது. எனினும் இந்ததடவை தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்ட காலங்களில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக புத்தாண்டுக்கு முன்னதாக பெரும்பாலான மக்கள் கொள்வனவுகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்று காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹான எச்சரித்துள்ளார்.
அதன் விளைவாக, பண்டிகை காலங்களில் கொள்வனவு செய்யும்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் கோரியுள்ளார்.
இதேவேளை கை கழுவுதல் வசதிகள் உட்பட கோவிட் தொடர்பான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தங்கள் வியாபாரத்தளங்களில் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வர்த்தகத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam