கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த இந்திய கப்பலால் சீனாவிற்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு ஐஎன்எஸ் கரன்ஜி என்ற நீர்மூழ்கி கப்பலை அனுப்பியதன் மூலம், இந்தியா, சீனாவுக்கும் மாலைத்தீவுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் கடல்வள ஆராச்சியை மேற்கொள்ளும் முகமாக தமது ஆராய்ச்சி கப்பலான சியாங் யங் கொங் 3 என்ற கப்பலுக்கு அனுமதி வேண்டும் என்று முன்னதாக சீனா இரண்டு நாடுகளிடமும் கோரியிருந்தது.
எனினும் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு அதனை நிராகரித்தது மறுபுறத்தில் மாலைத்தீவில் சீன சார்பு ஆட்சியை கொண்டிருக்கும் அரசாங்கம் கடந்த 23ஆம் திகதியன்று சீனாவின் கப்பல் கோரிக்கைக்கு அனுமதியை வழங்கியது.
இரண்டு நாடுகளுக்கும் கடும் செய்தி
இதனையடுத்தே இந்த இரண்டு நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கையை கூறும் வகையில் இந்தியா 100 பேர் பயணிக்கும் தமது நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பியதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கப்பல் இன்று கொழும்பில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளது.
இதேவேளை சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் மாலைத்தீவுக்கு இந்த மாதம் 8ஆம் திகதி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
