கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பெரும் போகத்திற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 127.191 மில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது
2024 /2025 பெரும் போக பயிர் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான உரமானியத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறன.
9064 விவசாயிகள்
அந்த அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள 9064 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 127.191 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

பூநகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, பரந்தன், கண்டாவளை, முழங்காவில், பளை, கிளிநொச்சி ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள குறித்த செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri