பேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2020, நவம்பர் 11, அன்று அறிவித்த கட்டணங்களைத் தவிர, கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கோவிட் காலத்தில், பேருந்துகளின் இருக்கை அளவுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவிட் தொற்று நோய்களின் போது இயக்கப்படும் பேருந்துகளுக்கு 1.2% கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்தார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ .12 ஆக உயர்த்தப்பட்டது, அதிகபட்ச பேருந்துக் கட்டணம் 473 முதல் 567 ரூபா வரை உயர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை முதல் பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்லாமல் மீறி செயற்படும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு திலும் அமுனுகம, காவல்துறை மா அதிபரிடம் கேட்டுள்ளார்.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri