பேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2020, நவம்பர் 11, அன்று அறிவித்த கட்டணங்களைத் தவிர, கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கோவிட் காலத்தில், பேருந்துகளின் இருக்கை அளவுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவிட் தொற்று நோய்களின் போது இயக்கப்படும் பேருந்துகளுக்கு 1.2% கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்தார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ .12 ஆக உயர்த்தப்பட்டது, அதிகபட்ச பேருந்துக் கட்டணம் 473 முதல் 567 ரூபா வரை உயர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை முதல் பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்லாமல் மீறி செயற்படும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு திலும் அமுனுகம, காவல்துறை மா அதிபரிடம் கேட்டுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan