ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு திட்டமிட்டபடி இந்த தேர்தல் நடைபெறும் என தனது அமைச்சரவைக்கு ரணில் விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதியை இணங்கச் செய்யும் பசில் ராஜபக்சவின் முயற்சி தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் விக்ரமசிங்க தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
எனினும், பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை களத்தில் இறக்காது விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளிக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுஜன பெரமுன ஏற்கனவே பிளவுபட்டுள்ள நிலையில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெரமுன பிரசாரம் செய்து வருகிறது.
ஜனாதிபதிக்கு ஆலோசனை
பசிலும் கடந்த வாரம் விக்ரமசிங்கவைச் சந்தித்து இந்த விடயத்தில் இணக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துமாறு விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

2019 தேர்தல் போட்டியில் 40 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவும், தமது கட்சிக்குள் சிக்கல்கள் தொடரும் நிலையில் 50 சதவீதத்தைப் பெற கடினமாக பிரசாரம் செய்ய வேண்டும்.
இந்நிலையில், விக்ரமசிங்க ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டுமானால், கடுமையான பிரசாரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கள நிலவரப்படி, 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri