இலங்கையில் பதிவான கோவிட் மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இந்த மாதத்தின் 13ம் திகதி நிலவரப்படி, இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றால் இறந்தவர்களில் 97.7 வீதமானோர் கோவிட் தடுப்பூசி போடப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி, 13ம் திகதி நாட்டில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 5,775 ஆக இருந்தது.
அவர்களில் 5,295 பேர் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை கோவிட் நோய்த்தொற்றால் இறந்த மற்ற 480 பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில், 417 பேர் ஒரே டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். இது மொத்த இறப்புகளில் 7.2 வீதம் ஆகும்.
கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட 63 பேர் தொற்றுநோயால் இறந்துவிட்டதாக சுகாதாரத் துறை மதிப்பிடுகிறது, இது கோவிட் நோய்த்தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.1 வீதம் ஆகும்.
