அரச கூட்டுத்தாபனங்களினால் ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்!மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்
அரச கூட்டுத்தாபனங்களினால் ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நட்டம்
இதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்த நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனியும் தாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
