அவசரகால சட்டம் தொடர்பில் பீரிஸ் வெளியிட்ட தகவல்
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தலைவர் தாம் என்றும், கட்சியை உருவாக்கும் வரையிலான அனைத்து கலந்துரையாடல்களிலும் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
அவசரகால சட்டம்
இந்நிலையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
அவசரகாலச் சட்டம் என்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு
சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது தொடர்பான போதிய ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமில்லை என்பதாலேயே நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தேன். அந்த சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்” என கூறியுள்ளார்.
மேலதிக தகவல்-ராகேஷ்