இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவல்
இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் (Nawaz Sharif) ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சமாதான ஒப்பந்தத்தில் செரீப்பும் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹரிபாயும் ( Atal Bihari) கையெழுத்திட்டுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முசாரப்பால் ஆரம்பிக்கப்பட்ட கார்கில் மோதலுக்கு தமது தவறே காரணம் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
பிரகடனத்தில் கையெழுத்து
1998ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று, பாகிஸ்தான் ஐந்து அணு சோதனைகளை நடத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து, வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது இரண்டு தலைவர்களும் 1999 பெப்ரவரி 21ஆம் திகதி லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதையும், மக்களிடமிருந்து தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அணுசக்தி சோதனை
எனினும் பாக்கிஸ்தானியப் படைகள் ஜம்மு மற்றும் காஸ்மீரில் கார்கில் மாவட்டத்தில் ஊடுருவியதால், 1999 மார்ச்சில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது.இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் நடத்திய முதல் அணுசக்தி சோதனையின் 26ஆவது ஆண்டு நிறைவைக் குறித்த கருத்துரைத்துள்ள நவாஸ் செரீப், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அணுசக்தி சோதனைகளைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்தார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் மறுத்து விட்டதாகவும் நவாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri