கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக புலம்பெயர்தல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய குடியுரிமை பிரதிநிதிகளைக் கொண்டவர்கள் இனி ஒன்லைனில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கனடா அறிவித்துள்ளது.
ஆனால், குடியுரிமை பிரதிநிதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் சார்பில் தாங்களே விண்ணப்பிக்க முடியாது.
குடியுரிமை பிரதிநிதிகளைக் கொண்டவர்களுக்காக ஒன்லைன் போர்ட்டல் திறந்துள்ளது. ஆனால், குடியுரிமை பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு சிறிது காலம் வரை, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் சார்பில் தாங்களே விண்ணப்பிக்க முடியாது.
நவம்பர் 30 முதல், கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தன் ஒன்லைன் போர்ட்டலை திறந்து வைப்பதை, குடியுரிமை பிரதிநிதிகள் கொண்டோர் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு வசதியாக நீட்டித்துள்ளது.
அப்படி ஒன்லைன் மூலம் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள், அவர்களே தங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தாங்களேதான் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.
அத்துடன், தங்கள் கணக்கு தொடர்பான பாஸ்வேர்டு முதலான எந்த விடயங்களையும் தங்கள் குடியுரிமை பிரதிநிதி உட்பட யாரிடமும் வெளியிடக்கூடாது.
இது குறித்து மின்னஞ்சல் வாயிலாக, கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்த ஒரு செய்தியில், குடியுரிமை பிரதிநிதிகள், விண்ணப்பிப்பவர் சார்பில் தாங்களே ஒன்லைனில் விண்ணப்பிக்கக்கூடாது என்றும், ஆனால், அவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கலாம் என்றும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை ஒன்லைன் வாயிலாகச் சமர்ப்பித்த பின், அவர் சார்பில் புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை நவீனமாக்கும் வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும்.
தனி நபர் விண்ணப்பதாரர்கள் குடியுரிமைக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பத்திற்கான ஆதாரத்தையும் ஒன்லைன் வாயிலாக கனடா பெறத் தொடங்கியுள்ளது.
இந்த ஆவணங்கள், குடியர்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், தங்கள் குடியுரிமைக்கான உரிமையை நிரூபிப்பதற்கு உதவுகின்றன.
2022ஆம் ஆண்டில், குடும்பங்கள், வயது வராதவர்கள் ஆகியோருக்கும் ஒன்லைன்
வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன், குடியுரிமை
பிரதிநிதிகளும் விண்ணப்பதாரர் சார்பில் ஒன்லைனில் விண்ணப்பிக்க
அனுமதியளிக்கப்படும் என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை
அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022