தனது தனிப்பட்ட இல்லம் தொடர்பில் ரணில் வெளிப்படுத்திய தகவல்!
கொழும்பு இரண்டு, ஐந்தாவது ஒழுங்கையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட இல்லம் தொடர்பில் முடிவு செய்வதற்கு காலம் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் நடத்திய கூட்டம் ஒன்றின்போது அவர் தமது கருத்தை வெளியிட்டார். ரணில் விக்கிரமசிங்கம் தனது தனிப்பட்ட இல்லத்தை கொழும்பின் ரோயல் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பிலேயே ரணில் விக்கிரமசிங்க தமது கருத்தை வெளியிட்டார். தாம் இன்னும் குறித்த இல்லத்தில் வாழ்ந்து வருவதால் அது தொடர்பில் சிந்திக்க நேரம் இருக்கிறது என்று ரணில் குறிப்பிட்டார்.