தொலைதூரப் பகுதிகளுக்கான தொடருந்து சேவைகள் குறித்து தகவல்
தொலைதூரப் பகுதிகளுக்கான பிரதான தொடருந்து சேவைகள் வரலாற்றில் முதல் தடவையாக இரத்துச் செய்யப்படும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு வலயத்திற்குட்பட்ட மாஹோ, கல் ஓயா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதான தொடருந்துகள் ஆளணிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களத்தில் அத்தியாவசியமான ஒவ்வொரு தரமும் ஊழியர்கள் வெற்றிடங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து சேவைகளில் மூன்றாம் தரத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட இயந்திர ஓட்டுநர்கள் இன்னும் இரண்டு இடங்களுக்கு உயர்த்தப்படவில்லை.
இதனால், அவர்களால் தொடருந்து இயந்திரங்களை இயக்க முடியவில்லை என்று கொந்தசிங்க கூறியுள்ளார். இதற்கிடையில், ஒப்பந்த அடிப்படையில் தொடருந்து பாதையில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் முறையான சேர்க்கை நடைபெறும் வரை உறுதிப்படுத்தல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடருந்து வரலாற்றில் முதல் தடவையாகக் கொழும்பு கோட்டைக்கும்
மட்டக்களப்புக்கும் இடையில் இயக்கப்படும் தொடருந்தை இரத்து செய்யும் நிலை
ஏற்பட்டுள்ளது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகார்ஜூனா.. கிசுகிசுவுக்கு மனைவி அமலா கொடுத்த பதில் Cineulagam
