நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியான பகீர் தகவல்!
எனக்கு ஐஎஸ் அமைப்பில் சேர தடை விதித்தால் சாலையில் இறங்கி கத்தியால் குத்தி யாரையாவது கொல்வேன் என நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அஹமது ஆதில் முகமது சம்சுதீன் தெரிவித்ததாக அவருடன் வசித்த நபர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் ஒக்லாந்து பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை மேற்கொள்ள அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற இலங்கையர் பொலிஸாரினால் சுட்டுகொல்லப்பட்டார். தாக்குதல் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் ஆக்லாந்தில் 2017ல் சம்சுதீனுடன் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்த நபரிடம் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நான் கடந்த 2017ல் பல மாதங்கள் அவருடன் சேர்ந்து தங்கியிருந்தேன். சிரியாவுக்கு எப்படி பயணம் செய்வது மற்றும் அது தொடர்பாக உதவ ஆட்களை எனக்கு தெரியுமா என அடிக்கடி சம்சுதீன் கேட்பார்.
மேலும் என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி ஐஎஸ் இயக்கத்தில் சேர தடை போட்டால் சாலையில் இறங்கி கத்தியால் குத்தி யாரையாவது கொல்வேன், எனக்கு வெடிகுண்டு எப்படி தயாரிக்க வேண்டும் என்பது கூட தெரியும் என கூறினார்.
இதோடு, இங்கேயே முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என என்னிடம் சொன்னார்.
அதற்கு நான் சம்சுதீனிடம், உன் செயலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேட்டதற்கு, நியூசிலாந்தில் வாழும் அனைத்து மக்களும் kuffar (நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் அவதூறு பேசுபவர்கள் என பொருள்) என என்னிடம் கூறினார்.
ஒரு முறை சம்சுதீனின் படுக்கைக்கு அடியில் பெரிய கத்தி இருப்பதை கண்டேன். அந்த காட்சியை கண்ட பின்னர் அவர் என்னை கொன்றுவிடுவார் என பயம் ஏற்பட்டது.
இதன்பிறகு தூங்கும் போதும் ஒரு கண்ணை திறந்து கொண்டே இருப்பேன். என் பெரும்பாலான நேரத்தை வீட்டுக்கு வெளியே தான் செலவழிப்பேன் என கூறினார்.
இதற்கு பின்னர் சம்சுதீன் மீது கொண்ட அச்சத்தால் வீட்டை காலி செய்ததாக” கூறியுள்ளார்.
