இலங்கையில் பரவும் புதிய கோவிட் வைரஸ் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்
இலங்கையில் பரவி வரும் புதிய கோவிட் வைரஸ் காற்றில் ஒரு மணித்தியாலம் இருக்கும் தன்மை வாய்ந்தது என இலங்கையின் சுகாதார அதிகாரிகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் நீலிக மாலவிகே புதிய வைரஸ் காற்றில் ஒரு மணித்தியாலம் நிலைத்திருக்ககூடியது என தெரிவித்துள்ளார்.
இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. இது காற்றில் பரவக்கூடியது. ஒரு மணித்தியாலம் காற்றில் நிலைத்திருக்கக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் காற்றில் பரவும் வைரஸ் ஊடாக எந்த அறவு பாதிப்பு ஏற்படும் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,