பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறியதாவது,
பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள்
2024 ஆம் ஆண்டில் பாடசாலைக்கு செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 711 ஆகும்.

2025 ஆம் ஆண்டில் 885 ஆகவும் உள்ளது. அவர்களில் பாடசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் 280 மாணவிகள், 290 மாணவர்கள்.2025 ஆம் ஆண்டில், 384 மாணவிகள், 393 மாணவர்கள்.
2024 ஆம் ஆண்டில் பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்களின் எண்ணிக்கை 597 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 301 ஆகவும் உள்ளது.
இதேவேளை, மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 309 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 210 ஆகவும் உள்ளது.
பாடசாலையில் சேர்க்கப்படாத மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 47 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 91 ஆகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam