கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சிசிடிவி காட்சிகள் எவையும் பதிவாகவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (19) இடம்பெற்றபோது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி பதிவுகள்
குறித்த வழக்கு விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் வேளையில், கொழும்பு குற்றப்பிரிவு இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், மரணம் நிகழ்ந்த வீட்டில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் இருந்தபோதிலும், 2026 மே 5 ஆம் திகதிக்கும் 2026 மே 7 ஆம் திகதிக்கும் இடையில் எந்தவொரு வெளியாளும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை சிசிடிவி பதிவுகள் காட்டுவதாக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர் வசித்த வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்களும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவற்றில் எந்த காட்சியும் பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வீட்டில் சிசிடிவி கமராக்களை பொருத்திய நிறுவனத்தின் பொறியாளர் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள்
மேலும், உயிரிழந்தவர் வசித்த வீடு மற்றும் மரணம் நிகழ்ந்த வீட்டிலும் உள்ள சிசிடிவி கமரா அமைப்புகள் தொடர்பான டிவிஆர்-களை (DVRs)தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவும், அவற்றை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கைகளை கோரவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
மேலும் சாட்சியம் அளித்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகளை அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சாட்சியம் அளித்த பொலிஸார், சம்பவ இடத்தில் இரண்டு வகையான அடையாளம் தெரியாத மாத்திரைகள் இருந்ததாகவும், அவற்றில் ஒரு வகையில் 9 மாத்திரைகளும் மற்றொரு வகையில் 11 மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவருக்கும் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் குறித்த அறிக்கைகளைப் பெறுமாறு முந்தைய நாள் உத்தரவுகள் பெற்றிருந்தபோதிலும், போதிய நேரமின்மையால் அவற்றை பெற இயலவில்லை என்றும், அதன்படி, மீண்டும் பத்திரங்களை தாக்கல் செய்து அதற்கான உத்தரவுகளை பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாட்சியங்களின் விசாரணை
மேலும், கபில சந்திரசேனவிற்கு பிணை வழங்கிய இருவரிடமும் வாக்குமூலம் பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு இன்று பல சாட்சிகளை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைத்திருந்த நிலையில், அவர்கள் அனைவரிடமும் இன்று சாட்சியத்தை பெறுவது சாத்தியமில்லை என்றும், தேவையற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மரணம் தொடர்பான சாட்சியங்களின் விசாரணை பின்னர் நடத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam