விரும்புரிமையினால் பிளவடைந்த இலங்கை - ரணில் தொடர்பில் வெளியான தகவல்
சுதந்திரத்தின் பின்னர் பல தரப்பினரின் குற்றச் சுமத்தல்கள் காரணமாக இலங்கை மக்கள் பின்னோக்கிச் சென்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்சமயம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமாகும். நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்துள்ளார்.
நாட்டையும் உலகத்தையும் புரிந்து கொண்ட தலைவர் நாட்டை ஆள்கிறார். அனைத்து சக்திகளையும் திரட்டி மாற்ற முடியாத கொள்கை ஒன்றிற்கு நாட்டை கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்தின் பின்னர் நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட பல தேசிய தலைவர்களை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விருப்புரிமை முறைமை நாட்டைப் பிரிப்பதற்கு வழிவகுத்தது. எவர் குற்றம் சுமத்தினாலும் விருப்புரிமை முறையின் கீழ் தெரிவு செய்யப்படுவது மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய வானொலிக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
